Thiruthangal Nadar Vidhyalaya

பொங்கல் விழா கொண்டாட்டம்.

தை திருநாளை சிறப்பிக்கும் விதமாக நம் பள்ளியில் 14.01.2020 அன்று பொங்கல் வைக்கப்பட்டு இறைவழிபாட்டுடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
நாட்டுப்புறக் கலைகள் அடங்கிய புலியாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், மற்றும் பறையாட்டத்துடன் நிர்வாகக் குழு உறுப்பினர்களை விழா மேடைக்கு மாணவர்கள் அழைத்து வந்தனர். ஆசிரியை திருமதி செ.சுகந்தி அவர்கள் வரவேற்புரை வழங்கிய பின்னர் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வாழ்த்துரையுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.விளையாட்டு மைதானத்தில் நினைக்க மறந்த கலையாக இருந்த சிலம்பம் மற்றும் நெருப்பு வளையம் சுற்றுதல் கலையை மாணவர்கள் சிறப்பாக நிகழ்த்திக் காட்டினர்.
மாணவர்களுக்கு நொண்டி ஓட்டம், சாக்குப் பை ஓட்டம், கரும்பு உண்ணுதல், பானை உடைத்தல், பொங்கல் உண்ணுதல், கயிறு இழுத்தல், நீர் நிரப்புதல், கம்பைச் சுற்றுதல் போன்ற பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் கொடுத்து பாராட்டப்பட்டது. ஆசிரியைகளுக்கு அறுசுவை உண்ணுதல் போட்டி நடத்தப்பட்டது. தமிழ்த்துறை ஆசிரியை திருமதி வே.செல்வராணி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது