044 – 25993131, 044 – 2599 5555.
Mobile No. 73586 22203
மாணவர் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் விழா 17.12.2025 அன்று மிகுந்த எழுச்சியுடனும் பெருமையுடனும் கொண்டாடப்பட்டது. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த மகாகவியின் நினைவைப் போற்றும் நோக்கில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
விழாவின் தொடக்கமாக,மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, மாணவர்கள் பாரதியாரின் சிந்தனைகள் எவ்வாறு சமூக மாற்றத்தை உருவாக்கின என்பதை உரை, பாடல், நடனம் ஆகியவற்றின் வாயிலாக வெளிப்படுத்தினர். மேலும், மாணவர்கள் பல குரலில் பேசியும், கவிதை வாயிலாகவும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த விழா, மாணவர்களிடையே தமிழ் மொழியின் பெருமையையும், தேசப்பற்றையும், சமூக பொறுப்புணர்வையும் வளர்க்கும் வகையில் அமைந்தது. மாணவர் தமிழ் இலக்கிய மன்றத்தின் இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.